நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் மற்றும் சளி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக தகவல் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று தொண்டர்கள் வேண்டுகின்றனர்.

இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.