தமிழகத்தில் கனமழை ஓய்ந்து கடந்த ஒரு வாரமாக வானம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.