உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவர் லரைப் ஹஸ்மி பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் விலை தொடர்பாக இவருக்கும் நடத்துனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஹஸ்மி மாமிசம் வெட்டும் கத்தியால் நடத்துனரை தாக்கியுள்ளார். இந்த சத்தம் கேட்டு பேருந்து நிறுத்திய ஓட்டுனர் நடத்துனரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து கல்லூரி வளாகத்தில் பதுங்கியிருந்த ஹஸ்மியை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய ஆயுதத்தை மிட்க முயற்சித்த போது தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அவரது காலிலேயே குண்டு பட காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.