ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை அங்கு வந்த தூய்மை பணியாளர் பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகியிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.