கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் களமச்சேரியிலுள்ள குசாட் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் பலி ஆகியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 46 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இசை நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த பாப் பாடகி தவானி பானுஷாலி பங்கேற்று பாடல் பாடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். திறந்தவெளியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.