ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டெல்லியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்து ஹரியானாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பிரதீப் உடனடியாக பேருந்து நிறுத்தியதோடு பயணிகளையும் பேருந்தில் இருந்து இறங்கச் செய்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார் இதையடு்த்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிந்ததோடு தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.