மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஒரு மரபெட்டை கிடந்துள்ளது அந்த மரப்பெட்டியில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் வெகு நேரமாக கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை கடந்து சென்றவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரப்பெட்டிக்குள் துணியில் சுற்றியபடி பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.