கடந்த 2022 ஆம் வருடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டது. இந்த ரயில்கள் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இது பயண நேரத்தை மிச்சப்படுத்ததால் பயணிகள் அதிகமாக விரும்புகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடங்களுக்கான அட்டவணை மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி டெல்லி மற்றும் ஆர்ம்ஸ் ஆண்டோரா இடையே ஓடும் ரயிலின் அட்டவணையை இந்திய ரயில்வே மாற்றி இருக்கிறது .

அதன்படி ரயில் எண் 22447/22448 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். தற்போது இந்த ரயில் வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. உடனடியாக செயல்படுத்தப்படாது. ஆனால் அடுத்த வருடம் மார்ச் 21 ஆம் தேதி அன்று இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த சமயத்தில் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் அதற்கு ஏற்றவாறு பயணிக்கலாம். இந்த மாற்றம் அமலுக்கு வரும் வரை அந்த ரயில் வெள்ளிக்கிழமை இயக்கப்படாது மற்ற அனைத்து நாட்களிலும் இது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.