தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள 10,219 குரூப் 4 பணியிடங்களை நிரப்ப இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்விற்கு பிறகு தகுதியான நபர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.