தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள 10,219 குரூப் 4 பணியிடங்களை நிரப்ப இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்விற்கு பிறகு தகுதியான நபர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more