தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள 10,219 குரூப் 4 பணியிடங்களை நிரப்ப இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்விற்கு பிறகு தகுதியான நபர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more