தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடலோரபகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.