தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டத்தை தொடர்ந்து இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தனது அரசியல் வருகை குறித்த முக்கிய ஆலோசனையில் நடிகர் விஜய் நேற்று ஈடுபட்டார்.

இதன் தொடர்ச்சியாக இன்றும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே இதன் மூலம் கிட்டத்தட்ட விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.