செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்.
நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.. வழக்கு விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளியில் ஆஜர் படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.