தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அறிவித்தது. அதன்படி சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காலி பணியிடங்கள் உள்ள கடைகளில் வெளிப்படை தன்மையுடன் கவுன்சிலிங் நடத்தி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.