தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 760 முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூறிய அவர், தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க CM அறிவுறுத்தினார். அதன்பேரில் அனைத்து பண்ணை பசுமை கடைகளில் ஒரே விலையில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.