ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஃபாரூக் அகமத். இந்த பள்ளியின் முதல்வர் முகத் ஹபிஸ். இந்நிலையில் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் வகுப்பறையில் இருந்த கரும்பலகையில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் ஃபாரூக் அகமத் அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் ஃபாரூக் அகமத் கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளியின் முதல்வர் தலைமறைவாகிவிட்டார். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.