தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் குயின் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக குயின் கணவரைப் பிரிந்து சத்யா நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குயின் ரவுடி உதயமூர்த்தி என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில் போலீசார் உதயமூர்த்தியை ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். அந்த வழக்கிலிருந்து உதயமூர்த்தியை ஜாமீனில் எடுப்பதில் குயின் தாமதம் செய்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த உதயமூர்த்தி ஜாமீனில் வெளியே வந்தவுடன் குயினை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயமடைந்த குயின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.