பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதே சமயம் மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா இல்லை என்றால் சான்றிதலுடன் வந்தால் மட்டுமே வீரர்கள் போட்டியில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.