தமிழில் புலனாய்வு இதழின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி (67). பல வருடங்களாக துடிப்போடு பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இவர் நேற்று இரவு மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் துறை பாரதியின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் துரை பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அன்னாரின் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.