ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 10ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பது, கடத்தல் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.