மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா சிறப்பாக நடைபெறும்.

காவல் தெய்வமாக இருக்கும் கரும்பாறை முத்தையா கோவிலில் நடக்கும் இந்த திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்படும் ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு பின்னர் அவற்றை சமைத்து ஆண்கள் மட்டும் சாப்பிடுவார்கள்.

இந்த வருடம் சுமார் 150 ஆடுகள் மற்றும் 3000 கிலோ அரிசி சமைக்கப்பட்டு திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது.