கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. மூன்று மாணவிகளும் இணைந்து வெளியே சென்ற நிலையில் அவர்கள் மாயமாகியதாக தெரிகிறது. மாணவிகள் பள்ளிக்கு வராததால் ஆசிரியர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

உடனே பெற்றோரும், உறவினர்களும் இணைந்து மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு தனிப்படைகள் மூலம் மாணவிகளை தேடி வருகின்றனர்.