அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி இரண்டாம் தேதி பல மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கிராமப்புற வங்கிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கட்கிழமை வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறையாகும். இந்த உத்தரவு எல்ஐசி அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றும் வங்கிகள் மதியம் 2.30 மணி முதல் வழக்கமான நேரம் வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.