தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2000 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தி அவர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் வழங்கப்படும் பணியை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவரவர் மாவட்டங்களில் பணி நியமனம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அந்தந்த மாவட்டங்களில் பணிவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒப்பந்த செவிலியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.