சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி வாலிபர் மர்ம நபர் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 8 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. மர்ம நபரின் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.