சேலம் மாவட்டத்தில் உள்ள மரக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மூன்று பேர் போலியான நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் செல்வகுமார் மரக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் ஆகியோர் போலியான நகைகளை வைத்து மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மேற்கூறிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.