ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அறிமுகம் இல்லாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம் கார்டை மாற்றி பெருமாளின் வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அத்திமலைபட்டு கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை கைது செய்தனர்.