டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே செப்டம்பர் எட்டாம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்கும் ஆலோசனை பரிசீலனை செய்ய இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் பிரிவுகள் செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் உச்சி மாநாட்டின் போது சமூகமான போக்குவரத்தை உறுதி செய்ய பல சாலைகள் முடியும் மக்கள் நடமாட்டத்திற்கு தடை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.