தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர், மதுரவாயல், கோடம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் மழை நீரில் மிதக்கிறது. மேலும் மழை நீடிப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.