தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா நாளை தொடங்க உள்ளது. இத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி நாளை தொடங்கி தொடங்கி வைக்க உள்ளார். மே.15 வரை நடக்கும் இந்த திருவிழாவில் 311 அரங்கங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது.