தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை எமிஸ் (EMIS) எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் வாயிலாக உரிய கால அட்டவணைப்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பான சில அறிவுரைகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மே 8-ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கி படிப்படியாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.