தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக காண்பித்துள்ளது. எங்கள் ஆட்சி அமைந்த பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளோம் என்பதை பெருமையாக கூறிக் கொள்கிறோம்.

கடந்த 2 வருடங்களில் 11 லட்சம் என்ற அளவிற்கு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம்  முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. மொத்தமாக 14 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியிருக்கிறது. தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று கூறினார்.