தமிழ்நாடு முழுவதுமாக  மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளது. இதில், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்கு, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் ரத்தாகி விடுமே என்பதால், தமிழகத்தில் சில எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனையடுத்து, இனிமேல் இலவச மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு மானியத்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.