சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து நீர் தேக்கங்களில் இருந்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

இந்த ஐந்து நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 11.57 டிஎம்சி ஆகும். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வந்துள்ளதாகவும் போதிய நீர் இருப்பு இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.