சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய பிரியமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் சென்னை அணியானது  தோல்வியடைந்தது. இந்த போட்டியை காண நடிகர் யோகிபாபு வந்திருந்தார்.

அவர் கூறியதாவது, ‛”சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்டை பார்க்க தற்போதுதான் நான் முதல் முறையாக வந்திருக்கிறேன். ரசிகர்களோடு உட்கார்ந்து கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தல தோனி கடைசி 2 பால் ஆடினார். அதுபோதும் தல தரிசனம் கிடைத்து விட்டது என கூறியுள்ள யோகி பாபு, அதையடுத்து தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை குஷிபடுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் .