தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை ஜோதிகா தற்போது ஹிந்தியில் ஒரு வெப்சீரிசில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். அதாவது அஜய் தேவகன் மற்றும் நடிகர் மாதவன் முக்கிய வேடத்தில் ஒரு புதிய படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார்.

இந்தப் படத்தை விகாஷ் பால் இயக்குகிறார். இந்த படத்தை அஜய் தேவகன் ப்லிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் நிலையில் வருகின்ற ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ம் ஆண்டு வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய பாலிவுட் படத்தில் ஜோதிகா கமிட்டாகியுள்ளார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிக்கும் ஒரு புதிய படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.