தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி. இவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றி இப்போது பகிர்ந்துள்ளார். இதுபற்றி சாய்பல்லவி பேட்டி அளித்ததாவது “நான் 7ம் வகுப்பு பயிலும்போது என் வகுப்பு மாணவன் ஒருவனை மிகவும் பிடித்திருந்தது. அவன் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு காதல் கடிதம் எழுதினேன். எனினும் அக்கடிதத்தை அவனுக்கு எப்படி கொடுப்பது என தெரியாமல் புத்தகத்தில் வைத்துக் கொண்டேன்.

எதிர்பாராமல் எனது அம்மா கண்ணில் அந்த கடிதம் பட்டு அளவு கடந்த கோபம் வந்து விட்டது. என்னை மிகவும் அடித்து விட்டார். இதையடுத்து தற்போது வரை மீண்டும் என் அம்மாவிற்கு கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் நான் செய்யவில்லை. நம்மை எவ்வளவோ செல்லமாக பார்த்துக் கொண்டு நிலாவை காட்டி சோறு ஊட்டிய தாயாக இருந்தாலும் அவரது கையில் அடிவாங்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். குழந்தைகளை நல்ல வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் தனது குழந்தைகளுக்கு ஹீரோ தான்”என்று அவர் கூறினார்.