சென்னையில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஏப்ரல் 17, 24, 30 ஆகிய தேதிகளில் காட்பாடி – சென்ட்ரல் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. அதே நாட்களில் சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்ட்ரல் மற்றும் காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கேற்றது போல பயணிகள் தங்கள் ரயில் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.