சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் வீட்டின் ஜன்னல் வழியாக கீழே குதித்து மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். மாணவி நித்யஸ்ரீ உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.