சென்னை அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினராக எழும்பூர் MLA பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய முன்தினம் அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் பொறுப்பில் சுமை அதிகரித்துள்ளதால் அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா செய்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது புதிய செனட் உறுப்பினராக MLA பரந்தாமன் உ நியமிக்கப்பட்டுள்ளார்.