கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2 தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், கோலார் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. எனினும், புலிகேசி நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நெடுஞ்செழியன் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.