தேர்தல் ஆணைய உத்தரவு மூலம் இபிஎஸ்-க்கு கட்சியின் சின்னமும் கொடியும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அதிமுக கொடியை OPS தரப்பு மாநாட்டில் பயன்படுத்துகிறது. அதன்படி, திருச்சி முழுவதும் அண்ணா உருவத்துடன், அதிமுக சின்னமான இரட்டை இலை உள்ள கொடி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அதிமுக கொடியில் அண்ணா படம் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

EPS தரப்புக்கு அதிமுக சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், OPS தரப்பு மாற்று ஏற்பாடு செய்துள்ளது.  இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் டூப்ளிகேட் வேலை பார்க்கிறார்” என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.