2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு எரிசக்தி துறை கொள்கை அறிக்கை ஆனது சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கப் பிரிவினை அதன் நிலக்கரி பிரிவுடன் இணைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது செலவினங்களை குறைப்பதோடு தற்போதுள்ள மற்றும் இனி நிறுவப்பட உள்ள அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி வழக்கீட்டினை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த உதவும். TANGEDCOதற்போது 4320 மெகாவாட் திறனுடைய அனல் மின் உற்பத்தி அலகுகளை கொண்டுள்ளது.