தமிழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரைத்தாள் கட்டணத்தை அரசு திருத்தி அமைத்துள்ளது. இந்திய முத்திரைத்தாள் சட்டம் 2023 என பெயரிடப்பட்ட திருத்த மசோதா இதற்காக நிறைவேற்றப்பட்டது. 1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின் படி ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டிலிருந்து நேரடியாக நீதித்துறை சாராத ரீதியில் முத்திரைத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. நூறு ரூபாய்க்கு குறைவான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துவதற்கான வசதி இணைய வழி மூலம் கிடைக்கப்பெறும்.