சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசார் தெரிவித்த நிலையில், பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.