சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை என ‘குடிநீர் வாரியம்’ அறிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% அதிகமான நீர் இருப்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் தேவை இருக்கும் நிலையில் 7 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. எனவே இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும். நெம்மேலி, மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.