பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கு ஏற்படுமா என்ற அச்சம் சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம் உச்சத்தை தொடுநிலையில் நீர் இருப்பு 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னைக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.