தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன், பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின் போக்கு முழுக்க திமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது. இது குறித்து கேட்டதற்கு அதிமுக தங்களை உதாசீனப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.