தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அலைபேசியில் ஹலோ என சொல்லாமல் தாமரை வணக்கம் என அடுத்த ஏழு நாட்களில் சொல்ல வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழக அரசியல் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கோவை இருக்க வேண்டும். திமுக மொத்த சொத்தையும் கொண்டு வந்தாலும் கோவை மக்கள் நேர்மையான பக்கம் நிற்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.