இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8,13,18,23,27 ஆகிய ஐந்து தேதிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.